எனக்கு இருந்த அன்புத் தோழி...
எனக்கொரு தோழி இருந்தாள்... இப்பொழுதும் இருக்கிறாள்... பெயர்... ம்ம்ஹ்ஹ்ஹ்... பெயர் வேணாம்... நான்கு வருடங்களுக்கு முன்னர்... நான் உயர்தரப் பரீட்சையை முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களின் பின்னர்...
அவள் ஒரு தனியார் பாடசாலையின் ஆசிரியையாக இருந்தாள்... நானும் அவளும் தொலைபேசி பாவிக்கத் தொடங்கிய புதிது.. எங்கள் இருவருக்கும் ஒரே வயது தான்... எனது நாளொன்றின் அனைத்து செயற்பாடுகளும் அவளிடம் பரிமாறப்படும்... அவளும் எல்லா நிகழ்வுகளையும் என்னிடம் பரிமாறுவாள்... இருவரும் அதிகாலை 4.30 க்கு எழும்புவது முதல் இரவு 11 மணி தாண்டி தூங்கும் வரை எல்லாமே நேரடி அஞ்சல் செய்யப்படும்...
ஆனால், அவள் இருந்த இடமோ என்னிலிருந்தும் சுமார் 300
கிலோ மீட்டர்களுக்கும் அப்பால்... அவளது எல்லா செயற்பாடுகளும் சமிக்ஞை
மூலம் எனக்கு தெரியப்படுத்தப்படும்.. எங்களது எண்ணம், பேச்சு, ஆசை எல்லாமே
ஒன்றாகத்தானிருந்தது... எமது எதிர்பார்ப்பு சமூகம் சார்ந்ததாக இருந்தது...
அதில் கொஞ்சம் சுய நலமும் இருந்தது.. பெரும்பாலும் நாங்கள் ஒருவருக்கொருவர்
நல்ல விஷயங்களையே பேசிக் கொள்வோம்.. உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள்,
அறிவியல் தகவல்கள், கண்ட, கேட்ட, பார்த்த சம்பவங்கள் எமது உரையாடல்களின்
தலைப்புச் செய்திகளாக இருக்கும்.. அன்றைய எமது அனுபவங்களும் அதில்
உள்ளடங்கியிருக்கும்..
உண்மையில் அவள் எனக்கு அன்புத் தோழியாக... இல்லை, ஆருயிர்த்தோழியாக இருந்தாள்.. நாங்கள் உடலளவில் தூரமாக இருந்தாலும் மனதளவில் ஒண்றித்து விட்டோம்.. மிக நெருக்கமாகி விட்டோம்... எங்களுக்குள் காதல் உணர்வுகள் துளிர்விடத் தொடங்கி விட்டன... அதிகமாக அன்பைப் பரிமாறிக் கொண்டோம்... சில நாட்களில்... இருவரும் காதலர்களாகி விட்டோம்.. எனது வாழ்க்கையின் முதல் காதல் இது; முதல் காதலி இவள்... எதிர் கால்த்தைப் பற்றி நிறைய கனவு கண்டோம்... எப்படியெல்லாம் வாழ்க்கை நடத்தலாம் என கருத்துப் பரிமாறினோம்... எமது வாழ்க்கையின் சந்தோஷத்தை உணர்ந்தோம்... மிகவும் சந்தோஷமான தருணம் இது...
ஆனால்... இந்த சந்தோஷம் அதிக நாட்களுக்கு நிலைக்கவில்லை... அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்... எமது தலைகளில் பாரிய இடி விழுந்தது போன்ற உணர்வு... நான் அவளது வீட்டாருடன் போட்டி போடுவதற்கு எனக்கு வயதும் போதவில்லை; பணமும் கையில் இருக்ககவில்லை... நான் தோற்றுப் போனேன்... இல்லை, நாம் தோற்றுப் போனோம்... கவலை எம்மை ஆட்கொண்டது; வாழ்க்கையே வெறுத்தது.. எம் இயலாமையை எண்ணி வருந்தினோம்.. இருந்தும் இறைவனின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம்.. எல்லாமே முடிந்து விட்டது...

அன்புத் தோழியாக இருந்தாள்;
ஆருயிர்க் காதலியானாள்;
மனைவியாகவில்லை;
மீண்டும் தோழியானாள்!
ஆனால், முன்பிருந்த தோழி வேறு...
இப்போதிருக்கின்ற தோழி வேறு...
#இவள் போன்ற இனிய தோழி என் வாழ்க்கையில் யாரும் கிடைப்பது அரிது..!!
எனக்கொரு தோழி இருந்தாள்... இப்பொழுதும் இருக்கிறாள்... பெயர்... ம்ம்ஹ்ஹ்ஹ்... பெயர் வேணாம்... நான்கு வருடங்களுக்கு முன்னர்... நான் உயர்தரப் பரீட்சையை முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களின் பின்னர்...
அவள் ஒரு தனியார் பாடசாலையின் ஆசிரியையாக இருந்தாள்... நானும் அவளும் தொலைபேசி பாவிக்கத் தொடங்கிய புதிது.. எங்கள் இருவருக்கும் ஒரே வயது தான்... எனது நாளொன்றின் அனைத்து செயற்பாடுகளும் அவளிடம் பரிமாறப்படும்... அவளும் எல்லா நிகழ்வுகளையும் என்னிடம் பரிமாறுவாள்... இருவரும் அதிகாலை 4.30 க்கு எழும்புவது முதல் இரவு 11 மணி தாண்டி தூங்கும் வரை எல்லாமே நேரடி அஞ்சல் செய்யப்படும்...
உண்மையில் அவள் எனக்கு அன்புத் தோழியாக... இல்லை, ஆருயிர்த்தோழியாக இருந்தாள்.. நாங்கள் உடலளவில் தூரமாக இருந்தாலும் மனதளவில் ஒண்றித்து விட்டோம்.. மிக நெருக்கமாகி விட்டோம்... எங்களுக்குள் காதல் உணர்வுகள் துளிர்விடத் தொடங்கி விட்டன... அதிகமாக அன்பைப் பரிமாறிக் கொண்டோம்... சில நாட்களில்... இருவரும் காதலர்களாகி விட்டோம்.. எனது வாழ்க்கையின் முதல் காதல் இது; முதல் காதலி இவள்... எதிர் கால்த்தைப் பற்றி நிறைய கனவு கண்டோம்... எப்படியெல்லாம் வாழ்க்கை நடத்தலாம் என கருத்துப் பரிமாறினோம்... எமது வாழ்க்கையின் சந்தோஷத்தை உணர்ந்தோம்... மிகவும் சந்தோஷமான தருணம் இது...
ஆனால்... இந்த சந்தோஷம் அதிக நாட்களுக்கு நிலைக்கவில்லை... அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்... எமது தலைகளில் பாரிய இடி விழுந்தது போன்ற உணர்வு... நான் அவளது வீட்டாருடன் போட்டி போடுவதற்கு எனக்கு வயதும் போதவில்லை; பணமும் கையில் இருக்ககவில்லை... நான் தோற்றுப் போனேன்... இல்லை, நாம் தோற்றுப் போனோம்... கவலை எம்மை ஆட்கொண்டது; வாழ்க்கையே வெறுத்தது.. எம் இயலாமையை எண்ணி வருந்தினோம்.. இருந்தும் இறைவனின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம்.. எல்லாமே முடிந்து விட்டது...
அன்புத் தோழியாக இருந்தாள்;
ஆருயிர்க் காதலியானாள்;
மனைவியாகவில்லை;
மீண்டும் தோழியானாள்!
ஆனால், முன்பிருந்த தோழி வேறு...
இப்போதிருக்கின்ற தோழி வேறு...
#இவள் போன்ற இனிய தோழி என் வாழ்க்கையில் யாரும் கிடைப்பது அரிது..!!